இறைவர் : அருள்மிகு ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஸ்வாமி
இறைவி :ஶ்ரீ பெரியநாயகி அம்பாள்
தல மரம் : பவளமல்லி
தீர்த்தம் : கமண்டல நதி தீர்த்தம்
Arulmigu Puthira Kaametiswarar Swamy Temple, Aarani,Thiruvannamalai | அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில்- ஆரணி,திருவண்ணாமலை தல வரலாறு
அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தால். புத்திர பாக்கியம் ஏற்பட அவரது குலகுரு வசிஷ்டரிடம் கேட்க அவரும் இத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்துமாறு கூறியபடி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். அதன்பின் தசரத மகாராஜாவிற்கு இராமர் பரதன், லட்சுமணர், சத்ருக்கனன் பிறந்தார்கள். சிவனுக்கு புத்திரகாமேட்டீஸ்வரர் என பெயர் உருவானது. அம்பிகைக்கு தனி சன்னதி உள்ளது போல் தசரத மகாராஜாவிற்கும் தனிச் சன்னதி உள்ளது. பிரகாரத்தில் காளியுடன் வீரபத்திரர், சொர்ண விநாயகர், முருகர், பைரவர், அம்பிகையுடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ர லிங்கம், கோபாலகிருஷ்ணர் அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வேண்டி அருள் பெறுகிறார்கள்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் PIN -
திருக்கோயில் திறக்கும் நேரம்:
ஆலயம் அமைவிடம்:
இந்த புண்ணிய தலம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைந் துள்ளது. ஆரணி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மி. தூரத்தில் உள்ளது. காஞ்சிபுரம் 71 கி.மீ. வேலூர் 41 கி.மீ. திருவண்ணாமலை 58 கி.மீ. தூரத்தில் ஆரணி உள்ளது.